ஒரு நாள் ஒரு காகம் தாகத்தினால் தவித்தது. அது தண்ணீர் குடிப்பதற்காக அங்கும் இங்கும் பறந்து திரிந்தது. |
![]() |
ஒரு கிணற்றின் அருகே ஒரு குடம் இருப்பதைக் கண்டது. அதன் பக்கத்தில் சென்று அதற்குள் எட்டிப் பார்த்தது. குடத்தின் அடியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டது. |
![]() |
காகத்திற்கு அடியில் இருந்த தண்ணீர் எட்டவில்லை. சிறிது நேரம் யோசனை செய்தது. |
![]() |
கிணற்றடியில் சிறிய கற்கள் இருப்பதைக் கண்டது. அந்தக் கற்களை ஒவ்வொன்றாக எடுத்துக் குடத்தினுள் போட்டது. |
![]() |
கற்களைப் போடப் போட குடத்துள் இருந்த தண்ணீர் மேலே மேலே வந்தது. காகம் தண்ணீரைக் குடித்து விட்டுச் சந்தோஷமாகப் பறந்து சென்றது. |
![]() |
எமது அறிவின் திறமையால் தடைகளைத் தாண்டி வெற்றி கொள்ளலாம். |
![]() |