பாடம் 5: புத்தியுள்ள காகம்

ஒரு நாள் ஒரு காகம் தாகத்தினால் தவித்தது.

அது தண்ணீர் குடிப்பதற்காக அங்கும்

இங்கும் பறந்து திரிந்தது.

ஒரு கிணற்றின் அருகே ஒரு குடம் இருப்பதைக் கண்டது.

அதன் பக்கத்தில் சென்று அதற்குள் எட்டிப் பார்த்தது.

குடத்தின் அடியில் மட்டும் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டது.

காகத்திற்கு அடியில் இருந்த தண்ணீர் எட்டவில்லை.

சிறிது நேரம் யோசனை செய்தது.

கிணற்றடியில் சிறிய கற்கள் இருப்பதைக் கண்டது.

அந்தக் கற்களை ஒவ்வொன்றாக எடுத்துக்

குடத்தினுள் போட்டது.

கற்களைப் போடப் போட குடத்துள் இருந்த தண்ணீர்

மேலே மேலே வந்தது.

காகம் தண்ணீரைக் குடித்து விட்டுச்

சந்தோஷமாகப் பறந்து சென்றது.

எமது அறிவின் திறமையால் தடைகளைத் தாண்டி

வெற்றி கொள்ளலாம்.