பாடம் 17: யார் உண்மையான நண்பன்

ஒருநாள் பாலன், சீலன் என்ற இரண்டு நண்பர்கள் பட்டணத்திற்குப் புறப்பட்டனர்.

பட்டணத்திற்குச் செல்லும் வழியில் ஒரு காடு இருந்தது.

அந்தக் காட்டு வழியாகச் சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பெரிய கரடி அவர்கள் முன்னே வருவதைக் கண்டார்கள்.

கரடியைக் கண்டதும் சீலன் அருகே இருந்த மரத்தின் மேலே மளமள என்று ஏறினான். பாலனுக்கோ மரம் ஏறத் தெரியாது.

என்ன செய்யலாம் என்று யோசித்தான். இறந்த உடல்களைக் கரடி அணுகாது என்று யாரோ கூறியது அவன் ஞாபகத்தில் வந்தது.

உடனே நிலத்தில் வீழ்ந்து தனது மூச்சை அடக்கியபடி உயிர் இல்லாதவன் போலப் படுத்துக் கிடந்தான்.

கரடி அவன் பக்கம் வந்து முகர்ந்து முகர்ந்து பார்த்து. எதுவித மூச்சும் இல்லாத இருப்பதைப் பார்த்து அவன் இறந்துவிட்டானென நினைத்துக் கரடி அப்பால் விலகிச் சென்று விட்டது.

கரடி சென்று மறைந்த பின்னர் மரத்திலிருந்து சீலன் கீழே இறங்கி வந்தான். பாலனைத் தட்டி எழுப்பி அவனைப் பார்த்து “பாலா! கரடி உன் காதில் ஏதோ சொன்னதுபோல் இருந்ததே அது என்ன சொன்னது?” எனக் கேட்டான்.

ஆபத்துக் காலங்களில் கைவிட்டு விடுபவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல அவர்களை நம்பி நடவாதே என்று அந்தக் கரடி கூறியது என்றான் பாலன். அதைக் கேட்ட சீலன் தனது தவளை உணர்ந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.சமாதானமான இருவரும் மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள்.