பாடம் 2 : செல்லப் பிராணிகள்

அது ஒரு மாலை நேரம். கடற்கரை மணலில் மாமாவூம் விநோத்தும் நரேனும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மூவரும் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சுதாவூம் விசாலியூம் அவர்களின் செல்லப் பிராணிகளுடன் அங்கே வந்தார்கள்.


மாமா : வாருங்கள், வாருங்கள், வணக்கம் விசாலி.

சுதா : வணக்கம் மாமா, வணக்கம் நரேன், வணக்கம் விநோத்.

விநோத், நரேன் : வணக்கம்.

மாமா : இதுதான் உன் செல்லப் பிராணியா? அழகான நாய்க்குட்டி. என்ன பெயர்?

விசாலி : டொமி.

மாமா : டொமிக்கு எத்தனை வயதாகின்றது?

விசாலி : பதினொரு மாதங்கள் ஆகின்றன மாமா. இது என் அப்பா எனக்குப் பிறந்த நாள் பரிசாகத் தந்தது.

மாமா : உன்னுடைய பூனைக்குட்டியின் பெயர் என்ன சுதா?

விசாலி : நான் சொல்கிறேன். எனக்குத் தெரியூம். 'டிங்கி' அப்படித்தானே?

சுதா : ஆமாம்! இதேபோல எங்கள் வீட்டில் இன்னொரு பூனைக்குட்டியும் இருக்கிறது. அது எனது தம்பியின் செல்லப் பிராணி.

விநோத்: ஓ.... அப்படியா? அப்படியென்றால் உனது அண்ணா ஓர் எலியைச் செல்லப் பிராணியாக வளர்க்கலாமே!

சுதா : பாருங்கள் மாமா, வினோத் கேலி செய்கிறான்.

மாமா : சில வகை எலிகளையும்கூடச் செல்லப் பிராணிகளாக வளர்க்கலாம்.

நரேன் : அப்படியா மாமா! வேறு எவற்றை இப்படி வளர்க்கலாம்?

மாமா : புறா, மைனா, அன்றில், கிளி போன்ற பறவைகளையும் நாய், பூனை, குரங்கு, முயல் போன்ற மிருகங்களையும் வெள்ளெலி, அணில் போன்ற பிராணிகளையும் இவ்வாறு வளர்க்கலாம்.

விநோத் : ஏன் மாமா இவைகளை வளர்க்கிறார்கள்?

மாமா : பொழுதை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு மக்கள் பல விடயங்களில் ஈடுபடுகின்றனர். விளையாட்டு, சேகரித்தல், சுற்றுலா செல்லல், தொலைக்காட்சி பார்த்தல் போன்றவை. செல்லப் பிராணிகளை வளர்ப்பதும் அவை போன்றது.

இதனால் பொழுது மகிழ்ச்சியாகக் கழியும். வளர்க்கும் பிராணிகளிடம் அன்பு கொள்வதாலும் அவை அன்பாக இருப்பதாலும் மனநிறைவு ஏற்படும். சிலருக்குத் துணையாகவும் இருக்கும்.

விசாலி : மாமா சொல்வது சரி. இவைகளால் பேசுவது மட்டுமே இயலாது. ஆனால் நம்மோடு அன்பாக இருக்கும்.

(விசாலி நாய்க்குட்டியை முத்தமிட்டாள்)

விநோத் : சீ!... அவளைப் பார்! நாய்க்கு முத்தம் கொடுக்கிறாள்!

சுதா : அதற்கென்ன?

மாமா : ஆனாலும் செல்லப் பிராணிகளை வளர்க்கும்போது கவனமாகத்தான் இருக்க வேண்டும். அவற்றைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உரிய காலத்தில் தடுப்பூசிகளை ஏற்றவேண்டும்.

நரேன் : தடுப்பூசியா மாமா?

மாமா : நோய்கள் வராமல் தடுக்கச் சிறு பிள்ளைகளுக்குத் தடுப்பு ஊசி ஏற்றுகிறார்கள் அல்லவா? அதுபோலவே இவைகளுக்கும் ஏற்ற வேண்டும். ஏற்றாவிட்டால் நோய் வரலாம். உதாரணமாக நாய், பூனைகளுக்கு நீர் வெறுப்பு (ரெபீஸ்) நோய் ஏற்படலாம். இது வளர்ப்பவர்களுக்கும் தொற்றக்கூடிய ஆபத்தானது

விநோத்: ஐயையோ... விசாலி, சுதா நீங்கள் இருவரும் கவனமாக இருங்கள்.

விசாலி: நாங்கள் டொமிக்கு எல்லாத் தடுப்பூ ஊசிகளையும் ஏற்றிவிட்டோம். அதற்கு உடலில் உண்ணி வராமல் மருந்திட்டுக் குளிப்பாட்டுவோம்.

மாமா : பிராணிகளிடத்தில் அன்பாக இருப்பது நல்லது. ஆனால், எச்சரிக்கையாகவூம் இருக்கவேண்டும். சரி நேரமாகிறது. வாருங்கள் வீட்டுக்குப் போகலாம்.


சொற்களின் பொருள் அறிவோம்.

கேலி - பரிகாசம். மகிழ்ச்சி - சந்தோசம்.
சுற்றுலா - உல்லாசப் பயணம் மனநிறைவூ - திருப்தி
முத்தம் - கொஞ்சுதல் நோய் - வருத்தம்
தொற்றுதல் - ஒட்டிக் கொள்ளுதல் வண்ணம் - நிறம்
ஏற்றம் - உயர்வூ வேற்றுமை - வித்தியாசம்
எச்சரித்தல் - கவனமாக இருக்கச் செய்தல்