(ஒரு கொக்கு தனது உணவிற்காக ஒரு குளத்திலிருந்து மீன்களைப் பிடித்து வந்தது. மீன்கள் பிடிபடாமல் தப்பி ஓடுவதால் அவற்றை இலகுவாக உண்ண ஒரு உபாயம் தேடியது. அது ஒருநாள் குளக்கரையில் துக்கம் கொண்டது போலத் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மீன்கள் கொக்கின் துக்கத்தை அறிய விரும்பின.)
மீன்:- 'என்ன கொக்காரே! நீர் இன்று ஏன் துக்கமாய் இருக்கிறீர்கள்? இத்தனை நாள் எங்களைப் பிடித்துத் தின்றதால் ஏதாவது வயிற்றுக் கோளாறோ?" கொக்கு:- 'ஐயோ! இல்லை! இல்லை! செம்படவர் நாளை வந்து, வலை வீசி உங்களையெல்லாம் பிடிக்கப்போவதாகக் கூறினார்கள். அதற்குப் பின் உங்களில் மிகமிகச் சிலரையே பிடிக்கும் எனக்கு, இரை இல்லாது போய்விடும். நீங்கள் எல்லோரும் பிடிபடப் போகிறீர்கள் என்பதை நினைத்தே கவலைப்படுகிறேன்." (இதைக்கேட்ட அந்தக் குளத்து மீன்கள் ஒன்று கூடின. எங்கள் மேல் கருணை கொண்டு, எவர் எங்களுக்கு உதவ முன்வருகின்றாரோ, அவரிடமே உபாயம் கேட்போம் என்று தீர்மானித்துக் கொக்கிடம் வந்தன.) மீன்:- 'கொக்காரே, கொக்காரே, தயை கூர்ந்து யோசித்து எங்களைக் காப்பாற்றும் வழி ஒன்று கூறுவீரா?"
கொக்கு:- (மனத்துள் சந்தோசப்பட்டு, வெளியில் துக்கம் காட்டுவது போல இரக்கமான குரலில் பேசியது.)
'நானோ, வயதானவன் அந்தச் செம்படவர்களோடு என்னால் சண்டைபோட முடியாது."
மீன்கள் :- சண்டை செய்யாமல் எமக்கு உதவி செய்யும் மார்க்கம் இல்லையா?
கொக்கு :- 'சரி! சரி! அப்படியானால், அவர்கள் வருவதற்கு முன்னர் வேறோர் இடத்துக்கு என்னால் உங்களை எல்லாம் கொண்டு செல்ல முடியும். அதனால் எனக்குப் பரோபகாரி என்ற பெயரும் கிடைக்கும்."
மீன்கள்:- 'நன்றி! மிக்க நன்றி! செம்படவர்கள் வலைகளைக் கொண்டு வரும் முன்பு எங்களைக் கொண்டு செல்லும். அவர்கள் வந்து எம் எல்லோரையும் பிடித்து விடுவார்கள்."
கொக்கு:- வாருங்கள்! வாருங்கள் ! உங்களை ஏற்படப்போகும் உய pரா பத்த pல pருந்து கா ப் பாற்ற ஒவ்வொருவராகக் கூட்டிச்செல்வேன்.
(கொக்கு தனது அலகினால் குளத்திலிருந்த மீன்களை ஒவ்வொன்றாகக் கௌவிக்கொண்டு பறந்தது. உதவுவது போலப் பறந்து சென்று ஒரு பாறையின் மேல் வைத்து, கொக்கு அவற்றை உண்டது. அது திரும்பிக் குளத்தடிக்கு வரும்போது ஒரு நண்டைக் கண்டது.)
நண்டு:- 'கொக்காரே தயவு செய்து என்னையும் கூட்டிச்செல்லும.;" நானும் செம்படவர்களின் கையில் அகப்படாது உயிர் தப்பலாம் என விரும்புகின்றேன்."
கொக்கு:- 'நண்டாரே, உமக்கும் உதவுகிறேன். என்னால் முடிந்தது இதுதான். வாரும் வாரும் போகலாம்."
(போகும் வழியில் இருந்த பாறையின் மேல் இறந்து சிதைந்த மீன்களையும், மீன் முட்களையும் நண்டு கண்டது. நண்டுக்குக் கொக்கின் மீது சந்தேகம் ஏற்பட்டது. தான் உயிர்தப்ப ஒரு உபாயத்தை யோசித்துப் பார்த்தது).
நண்டு:- 'கொக்காரே! கொக்காரே, வெளிக்கிடும் அவசரத்தில், எனது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் சொல்லாமல் புறப்பட்டுவ pட்டேன். உங்களுடன் வந்தால் அவர்களும் தப்புவார்களே."
(மனதிற்குள் மற்ற நண்டுகளையும் சாப்பிடலாம் எனக் கொக்கு நப்பாசை கொண்டது.)
கொக்கு:- 'நண்டாரே, நண்டாரே, உங்கள் எல்லோருக்கும் உதவ எனக்கு மிகுந்த ஆசைஇ இதோ விரைவாகத் திரும்பிச் செல்வோம்!!"
(திரும்பி வந்து நண்டாரைக் கொக்கு குளக்கரையில் இறக்கியது. கரையில் இறங்கியதும் நண்டு தன் கொடுக்கினால், விரைவாகக் கொக்கின் கழுத்தினைக் கடித்துத் துண்டாக்கியது.)
பேராசை கொண்ட கொக்கு, சமயோசித புத்தி கொண்ட நண்டால் மாண்டது.
- அடாது செய்தார் படாது படுவார்.