புலம் பெயர்ந்த மக்கள் தமது பிறந்த நாட்டைத் தமது தாயகம் என வாஞ்சையுடன் நினைவு கூர்வர். அனேகமாகத் தமிழர்கள் தென் இந்தியா, ஈழம் போன்ற நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்துள்ளனர். அங்கிருந்த முன்னாள் உபாத்தியாயர்கள் எப்படித் தோற்றமளித்தனர்? எவ்வாறு படிப்பித்தனர்? என்ற பல பாடல்கள் உண்டு. அப்படிப்பட்ட பாடல்களில், ஈழத்துப் புலோலியூர் கவிஞர் சிவக்கொழுந்து ஆசிரியரால் பாடப்பெற்ற பாடல் ஒன்றுண்டு.
சீலன் என்ற மாணவன் இரண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனுடைய கணித ஆசிரியர் கந்தப்பு ஆவார். அவர் தனது மாணவர்களைப் பார்த்து “நாளை வரும்போது நாலாம் வாய்ப்பாட்டைப் பாடமாக்கி வாருங்கள். பாடமாக்காவிடில் என்ன நடக்கும் என்று தெரியுந்தானே!” என்று கூறிவிட்டார். சீலன் நாலாம் வாய்ப்பாட்டைப் பாடமாக்கத் தெண்டித்தான். அவனால் பாடமாக்க முடியவில்லை.
அன்றிரவு......
“குடுமி குலைந்து விழக்
குறுவேட்டி அவிழ்ந்து விழத்
விடியுமட்டும் வாய்ப்பாட்டை
விடியுமட்டும் வாய்ப்பாட்டை
தடிப்பிரம்பைக் கையேந்தும்
சண்டாள வாத்தியவன்
அடிக்க வரும் கனாக்கண்டு
புடைத்தெழுந்து
விடியுமட்டும் வாய்ப்பாட்டை
விழுங்கிய நாள் வாராதோ!”
இன்று பெரியவனாய் இருக்கும் சீலன் நினைக்கிறான், ஆனந்தம் அடைகிறான் அந்த நாள் வாராதோ என்கிறான். இப்பாடலில் வரும் சிறப்பு என்ன? இந்தப் பாடலில் நடந்த சம்பவம் உண்மையானதா? உண்மையில்லாவிடில் எப்படி அறியலாம்? உண்மை என்றும் சொல்ல முடியுமா? கவிதை என்பது சொல்லோவியம் என்று சொல்கிறார்கள். இங்கு நீங்கள் காணும் காட்சி, ஓவியமா! அன்றேல் முன்னாள் உபாத்தியாயரின் கோபமா! பாடலைப் படித்து அறிவோம்.