பாடம் 16: நூலகம்

நல்ல நல்ல நூல்களே நூறு பத்து நூல்களை
நமது சிறந்த நண்பராம் அல்லும் பகலும் அவற்றையே
அறிந்து கற்றல் நல்லதாம் நூல கத்தில் காணலாம்
கல்வி தன்னிற் சிறந்திட ஆசை தீரப் படிக்கலாம்
கலைகள் பலவும் அறிந்திட அறிவு பெற்று வளரலாம்
நல்ல நூல்கள் உதவிடும் நல்ல நூல்கள் படித்திட
நாளும் கற்று உயருவோம் நமக்கு உதவும் நூலகம்
நாமும் நூல்கள் படித்திட நாடிச் செல்வோம் நூலகம்.

நூலகங்களை நாடிச் சென்று நல்லறிஞர்களின் நூல்களைத் தேடிப் படிப்பதன் மூலம் புதிய புதிய விடயங்களை அறிந்து கொள்ளலாம். அதனால் எமது உள்ளம் விசாலமடைவதுடன் அறிவும் பெருகுகின்றது.

நூல்களை வாசிப்பதனால் பெறும் மன மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் வார்த்தைகளால் விளங்கவைப்பது இலகுவன்று. அது வாசகர்கள் தாமாகவே பெறவேண்டிய ஓர் இனிய அனுபவமாகும். “யுனெஸ்கோ” அமைப்பு 1992ம் ஆண்டு முதல் ஏப்ரல் 23ம் திகதியை உலக புத்தகத்தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. இது எழுத்தாளர்களைப் பாராட்டுவதாகவும், வாசகர்களையும் மாணவர்களை ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.