பாடம் 4: எமக்கு உதவி செய்வோர்:

மனிதர்களாகிய நாம் வாழ்வதற்கு பலரது உதவிகள் தேவை.

பிறரது உதவிகள் இல்லாமல் நாம் வசதியாக வாழ முடியாது. ஆசிரியர், வைத்தியர், பொலிஸ் ஆகியோர் நமக்கு உதவுபவர்களில் சிலர்.

ஆசிரியர் நாம் கற்பதற்கு உதவுகிறார். நம்மிடம் நல்ல பண்புகளை வளர்க்கிறார்.

வைத்தியர் நாம் சுகமாக வாழ உதவுகிறார். நோய்கள் ஏற்பட்டால் மருத்துவம் செய்கிறார்.

பொலிஸ் அதிகாரி சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுகிறார். மக்களுக்குப் பாதுகாப்பு வழங்குகிறார்.

இவ்வாறு நமக்குப் பலர் உதவுகிறார்கள்.

அவர்களது சேவைகளைப் பாராட்டி நன்றி கூறுவோம்.