பாடம் 5: உடலைப் பேணுவோம்

நம் எல்லோருக்கும் உயிர் முக்கியம். உயிருக்கு உடல் முக்கியம். உடல் அழிந்தால் உயிரும் அழியும்.

உடலால்தான் நாம் எல்லா வேலைகளையும் செய்கின்றோம்.

உடலை நோய் அழிக்கும். நோய் வந்தால் உடற்பலம் குறையும்.

“நோய்க்கு இடங்கொடேல்” என்று முன்னோர் கூறினர். நோய் வராமல் உடலைப் பேண வேண்டும்.

உடலை எவ்வாறு பேணலாம்?

முறையான உணவை உட்கொள்ள வேண்டும்.

நல்ல சுகாதாரப் பழக்க வழக்கங்களைப் பின்பற்ற வேண்டும். நாள்தோறும் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.

ஓடுதல், வேகமாக நடத்தல், காலையும் மாலையும் உலாவுதல், நீந்துதல், இலேசாகக் குதித்தல், பந்து விளையாடுதல், சைக்கிள் மிதித்தல், யோகாசனம் என்பவை சில உடற்பயிற்சி முறைகள், உடற்பயிற்சி எல்லா உறுப்புகளையும் நன்றாக இயங்கச் செய்யும். வியர்வை வெளியேறும். உடல் உறுதியாகும். சுவாசத் தொகுதி நன்றாக இயங்கும். மனமகிழ்ச்சி ஏற்படும். உடல் உழைப்பில் ஈடுபடாதவர்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்தல் வேண்டும்.


உடற்பயிற்சி செய்து உடலைப் பேணுவோம்.

“உடலினை உறுதிசெய்”


இவற்றிற்கான ஆங்கிலச் சொற்களை எழுதுக.

ஓடுதல் -..............................................................
வேகமாக நடத்தல் -..............................................................
காலையும் மாலையும் உலாவுதல் -..............................................................
நீந்துதல் -..............................................................
குதித்தல் -..............................................................
விளையாடுதல் -..............................................................
சைக்கிள் மிதித்தல் -..............................................................
யோகாசனப் பயிற்சி -..............................................................