ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடம் தனிலே போகவேண்டாம்
போகவிட்டுப் புறஞ்சொல்லித் திரியவேண்டாம்
மாற்றானை உறவென்று நம்பவேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்கவேண்டாம்
தருமத்தை ஒரு நாளும் மறக்கவேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேடவேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் செல்லவேண்டாம்
சேராத இடந்தனிலே சேரவேண்டாம்
செய்நன்றி ஒருநாளும் மறக்கவேண்டாம்
- உலகநாதர்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
(எங்கே, எப்பொழுது, எவருடன், எவ்வளவு காலம், உமக்குப் பிடித்த்தவை, பிடிக்க்காதவை என்ப்பன பற்ற்றிக் குறிப்ப்பிட வேண்டும்)
ஓதாமல் | பொல்லாங்கு |
மாதா | வஞ்சனை |
புறஞ்சொல்லல் | மாற்றான் |
தனம் | சினம் |