பிரணவன் இங்கிலாந்தில் பிறந்து வாழும் ஒரு தமிழ்ச் சிறுவன். அவனுக்குத் தமிழ் கற்பதில் மிகுந்த ஆவல். சனிக்கிழமைகளில் அருகில் உள்ள தமிழ்ப் பாடசாலைக்குச் சென்று நான்காம் வகுப்பில் தமிழும், மிருதங்கமும் கற்று வருகிறான். ஒருநாள்ஆசிரியர் தமிழ்ப் பழமொழிகள் பற்றி வகுப்பில் சொல்லிக்கொடுத்தார். ஏனோ தெரியவில்லை பிரணவனுக்குப் பழமொழிகள் மேல் ஓர் அளவு கடந்த பற்று ஏற்பட்டது. கவிதை வடிவில் அமைந்திருந்த அழகு தமிழும், அவற்றின் உட்கருத்துக்களும் அவனை மிகவும் கவர்ந்துவிட்டன. பிரணவனின் தமிழ் கற்கும் ஆர்வத்தைக் கண்ட அவனது ஆசிரியரும், பெற்றோரும் அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தனர். அன்றிலிருந்து பிரணவன் பழமொழிகளைத் தேடியறிந்து படிக்கத் தொடங்கினான். அவனுக்கு “பழமொழிப் பிரணவன்” என்று ஒரு பட்டமும் வழங்கினர்.
ஒருநாள் வழியில் தனது நண்பன் ஒருவனைச் சந்தித்து உரையாடினான்.
பிரணவன்: நண்பா, நான் கூறும் பழமொழியின் கருத்தைக் கூறு பார்க்கலாம்.
நண்பன்: அப்படி என்ன பெரிய பழமொழி? சரி, கூறு பார்க்கலாம்.
பிரணவன்: “உப்பிட்டவரை உள்ளளவும் நினை” இதன் பொருள் என்ன?
நண்பன்: (நண்பன் சிறிது நேரம் யோசித்துவிட்டு) உமக்கு உப்புக் கொடுத்தவரை அவர் கொடுத்த உப்பு முடியும் வரை எப்போதும் நினைக்கவேண்டும்.
(பிரணவனுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால் அதனை வெளிக்காட்டவில்லை)
பிரணவன்: நீ கூறுவது நேரடியான பொருள். நாம் பழமொழிகளைப் படிக்கும்போது அவற்றின் உள்ளே இருக்கும் ஆழமான கருத்துக்களை அறிந்து படிக்க வேண்டும்.
நண்பன்: இந்தப் பழமொழியின் கருத்து என்ன?
பிரணவன்: எமக்கு உதவி செய்தவர்களை நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது. இதுதான் அதன் பொருள். என்னிடம் பழ பழமொழிகள் இருக்கின்றன. நான் அவற்றையெல்லாம் அழகாகத் தொகுத்து வைத்திருக்கிறேன். என்னுடன் வீட்டிற்கு வா காட்டுகிறேன்.
இருவரும் பிரணவனின் வீட்டிற்குச் சென்று பழமொழிகளைப் பார்த்தனர்.
பிரணவன் சேர்த்து வைத்திருக்கும் அழகையும், பழமொழிகளையும் பார்த்ததும் நண்பனுக்குத் தானும் அப்படிச் செய்ய வேண்டும்போல் இருந்தது. அவற்றில் சிலவற்றை எடுத்து இருவரும் படித்தனர். நாமும் சேர்ந்து படிப்போம்.
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
அருகில் | - பக்கத்தில் |
ஆர்வம் | - விருப்பம் |
பற்று | - ஆசை |
கவர்தல் | - மனம் இழுத்தல் |