பாடம் 11:பயணம் போனேன்

எனது பெயர் துளசி. நான் எனது பெற்றோ ருடன் இலண்டனில் வசித்து வருகிறேன். நான் நான்காம் வகுப்பில் படிக்கிறேன். எனது மாமா குமணன் லீட்ஸ் (Leeds) என்னு மிடத்தில் வசிக்கிறார். மாமாவுக்குச் சென்ற மாதம் திருமணம் நடைபெற்றது. இலண்டனி லிருந்து லீட்ஸ் இருநூறு மைல்கள் தொலைவில் உள்ளது. மாமாவின் திருமணத்திற்கு நாங்கள் ரயில் வண்டியில் (Train) சென்றோம். அது எனது முதலாவது தொடருந்துப் பயணமாதலால் கிளர்ச்சி ஊட்டும் அனுபவமாக அமைந்தது.

திருமணத்திற்கு முதல் நாள் ஒரு வாடகை மோட்டார் வண்டியில் தொடருந்து நிலையத்திற்குச் சென்றோம். அங்கே பிரயாணச் சீட்டைப் பெற்றுத் தொடருந்தில் ஏறி அமர்ந்தோம். அது சென்ற பாதையின் இரு பக்கங்களிலும் பசுமையான மரங்களும், ஆடு, மாடு, பன்றி, குதிரை, கோழி, விவசாயப் பண்ணைகளும், சிறிய நீர் நிலைகளுடன் அமைந்திருந்த இயற்கைக் காட்சிகளும் மிகவும் அழகாக இருந்தன. எமது பயணம் சுமார் மூன்று மணி நேரம் வரை அமைந்திருந்தது. லீட்ஸ் தொடருந்து நிலையத்தில் மாமா எமக்காகக் காத்திருந்தார். அங்கிருந்து அவரது மகிழுந்தில் (car) சென்று அவர் வீட்டை அடைந்தோம். அடுத்தநாள் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பல நண்பர்களையும் உறவினர்களையும் திருமணத்தில் கண்டு மகிழ்ந்தோம். அதன் பின்னர் அங்குள்ள பேருந்து (Bus) மூலம் பல இடங்களைப் பார்த்து அடுத்த நாள் இலண்டனுக்கு வந்து சேர்ந்தோம். இது எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு பயணமாகும்.