ஓர் ஆற்றங்கரையில் ஒரு நாவல்மரம் ஓங்கி வளர்ந்திருந்தது. அம்மரத்தில் சுவை ம pகுந்த நாவற்பழங்கள் எப்போதும் கிடைத்து வந்ததால் ஒரு குரங்கு அம்மரத்தில் ந Pண்ட காலமாக வசித்து வந்தது. ஆழம் மிகுந்த அந்த ஆற்றில் வசித்து வந்த ஒரு முதலை ஆற்றங்கரையில் ஏறி, நாவல் மரத்தடி மண்ணில் புரள ஒரு நாள் வந்திருந்தது. முதலையைக் கண்ட குரங்கு அதனைத் தனது விருந்தினனாக வரவேற்று, சுவை மிகுந்த நாவற்பழங்களைப் பறித்துப் போட்டது. அவற்றை உண்ட முதலை அதன் சுவையை விரும்பி, அன்று முதல் நாள்தோறும் வந்து குரங்குடன் சம்பாஷ pத்துச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டது.
ஒருநாள் தான் உண்டபின் எஞ்சிய பழங்களை, நீருக்கடியில் வசித்து வந்த தனது மனைவியிடம் கொண்டுசென்று உண்ணக் கொடுத்தது. அவற்றை உண்ட பெண் முதலை, “அடடா! இப்பழங்கள் இவ்வளவு சுவையாக இருக்குமானால் இதனை எப்போதும் உண்ணும் குரங்கின் ஈரல் எவ்வளவு சுவையாக இருக்கும்? எப்படியாவது அக்குரங்கின் ஈரலைக் கொண்டுவந்து எனக்குக் கொடுக்க வேண்டும்” என்று கேட்டது. ஆண் முதலை அந்த வேண்டுதலை மறுத்த போதிலும், பெண் முதலை வற்புறுத்தி இசைய வைத்தது.
மறுநாள் ஆற்றங்கரையில் முகவாட்டத்துடன் காணப்பட்ட முதலையைப் பார்த்த குரங்கு வாட்டத்தின் காரணத்தைக் கேட்டது. “தினமும் உனது அன்பான உபசரிப்பை ஏற்பதற்குப் பிரதிஉபகாரமாக, உன்னை விருந்துக்கு அழைத்து வராமலிருப்பதையிட்டு எனது மனைவி என்னில் கோபமாயுள்ளாள்” என்று முதலை கூறியது. தன்னால் நீரின் அடியில் நீந்த முடியாது எனக் குரங்கு கூறியது. அதற்கு முதலையானது தனது முதுகில் ஏறினால் இலகுவாக சீக்கிரத்தில் விருந்துக்கு செல்லலாம் எனக் கூறியது.
முதலையின் பேச்சை நம்பிய குரங்கு முதலையின் முதுகின்மேல் தாவி ஏறியது. சிறிது தூரம் சென்றதும், முதலை தனது உண்மையான நோக்கத்தைக் கூறியது. இதனைக் கேட்ட குரங்கு மனங்கலங்கிய போதும் “அடடா அருமை நண்பனே! இதனை முன்பே சொல்லக்கூடாதா? முதலில் சொல்லியிருந்தால் மரப்பொந்தில் கழற்றி வைத்துவிட்டு வந்த என் ஈரலைக் கையுடன் கொண்டு வந்திருப்பேனே” என்று தைரியமாகக் கூறியது. “அதனாலென்ன நாம் திருப்பிப்போய் அதனை எடுத்து வந்தால் போயிற்று” என்று கூறி முதலை திரும்பவும் நாவல் மரத்தடிக்கு வேகமாகச் சென்றது.
மரத்தை அண்மித்ததும், தப்பினோம் பிழைத்தோம் என்று குரங்கு மரத்தில் பாய்ந்து ஏறிக்கொண்டது. தனது மதி நுட்பத்தால் உயிர் தப்பிய குரங்கு தனக்குள் “நன்கு ஆராயாது நட்புக் கொள்வது ஆபத்தானது” என்று சொல்லிக் கொண்டது. ஏமாற்றம் அடைந்த முதலை, நல்லொரு நட்பை இழந்துவிட்டதை எண்ணி வருந்தியது.
“தீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற
தீயோர் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே - அவரோ
டிணங்கி யிருப்பதுவும் தீது”
(அருஞ்சொல் விளக்கம் | :- திரு அற்ற - சிறப்பு இல்லாத, இணங்கி இருப்பது - சேர்ந்து வாழ்வது, தீது - கெடுதியானது.) |