பாடம் 10: தன் நம்பிக்கையும் ஆளுமையும்

ஒருவர் தனது ஆற்றலிலும் நிறைவேற்றும் திறனிலும் நம்பிக்கை கொணடு; செயறப்டுவதிலிருநது; ஒருவரது ஆளுமையை அடையாளம ;காணலாம் என அறிஞர்கள் கூறுகின்றனர். தனி மனிதனின் ஒழுங்கமைந்த இயங்கியல் பண்பு தோற்றுவிக்கும் நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைப் போக்கு ஆகியவை தன்னம்பிக்கையையும் ஆளுமையையும் பிரதிபலிக்கும் என்பது உளவியலாளரின் கூற்றாகும்;. தீர்க்கமான குறிக்கோள் கொண்டிருப்பதும் அதை உறுதியாக மனதத்pல ;பதிதது; அதை நோகக்pச ;செயலப்டுவதும ;தனன்மப்pகi;கயை அடையாளப்படுத்தும் ஒரு காட்டிக் குணமாகும்.

நேரமேலாண்மை

தன்னம்பிக்கை உடையோர் ஒரு செயலை மேற்;கொள்ளும் போது அதற்கான காரியங்களைச் சரியான நேரத்தில் சரியான முறையில் செய்து முடிக்கக் கூடிய திறமை தமக்கு உண்டு எனப் பூரணமாக நம்பிச் செயல்படுவர். வாழ்க்கையில் குறுக்கிடும் வெற்றி தோல்விகளுக்குத் தளர்ச்சி இன்றி முகம் கொடுக்கும் மனப்பான்மை இருப்பதுதான் அசைக்க முடியாத தன்னம்பிக்கையின் அடையாளம்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின்”

என்ற திருக்குறளில் உள்ள திண்ணியர் என்ற சொல் தன்னம்பிக்கைத் திறன் கொண்டவரைக் குறிக்கிறது. விருப்புக் குறிக்கோள் பயணத்தில் அவநம்பிக்கை தலையிடுமானால் நம் செயல்கள் பல வழிகளில் தடுமாற்றம் உற்று நினைத்த செயல் கைகூடாது போகக் கூடும். ஒருவர் தமது திறமைக்கு ஏற்றவாறு நேரத்தை நிர்வாகம் செய்து இலட்சியத்தைக் கைகூட வைப்பதில் தன்னம்பிக்கையின் பங்கு பெரும் இடம் வகிக்கின்றது.

நேர் மறை எண்ணங்கள்

மனதின் ஆற்றல், ஆளுமையை வலிமையுடையதாக்கும். உற்சாகம் உள்ளவர்கள் தங்களைச் சுற்றியுள்ளவர்களிடமும் இனிமையான பூவின் நறுமணத்தைப்போல தம் உற்சாகத்தைப் பரவச் செய்துவிடுகிறார்கள். தன்னம்பிக்கை உடையவர்கள் எப்போதும் நிகழ்காலத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்படுவர். இறந்த கால நிகழ்வின் மூலம் சில படிப்பினைகளைப் பெறுவர். இறந்த காலத்திற்காக தமது ஆற்றலை வீணாக்கமாட்டார்கள். எதிர்காலத் திட்டமிடல் அவர்களிடம் இருக்கும்;; எதிர்மறையான கற்பனைகள் அவர்களிடம் காணப்படுவதில்லை.

ஆளுமைத் திறன்

ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்பவர், ஒரு சிறு குழுவை வழி நடத்துபவர், மாணவர்களை வழிநடத்தும் ஆசிரியர், ஆசிரியர்களை நிர்வகிக்கும் தலைமை ஆசிரியர், ஊழியாக்ளை ஊககு;விககு;ம ;மேலாளா,; மாவடட் நிhவ்hகதi;த நடத்தும் முதலமைச்சர், நாட்டைப் பரிபாலிக்கும் தலைமை அமைச்சர் என அனைவருக்கும் தன்னம்பிக்கைத் திறன் இன்றியமையாத ஆற்றலாகும். அறியாமையும் தன்னம்பிக்கைத் திறனும் இல்லாதவர்கள் தலைமை இடத்தில் இருந்தால், அவர்கள் மற்றவர்களைக் கண்டு அஞ்சுவர். அச்சத்தின் வெளிப் பாடாக மற்றவர்கள் மீது கோபப்படுவர். சிறு தவறுகளையும் பெரிதாக்கி, தங்களையும் மற்றவர்களையும் குழப்பங்களில் ஆழ்த்துவர். ஆகவேதான் தன்னம்பிக்கை என்பது இலட்சியம் தளராத உற்சாகம், முடியும் என்ற நம்பிக்கை ஆகிய பண்புகள் அமையப்பெற்று தனிமனித ஆளுமையின் சின்னங்களாக அமைவதனை அறிய முடிகின்றது.

ஆளுமை என்பதை “Pநசளழயெடவைல” என்று ஆங்கிலத்தில் கூறுவர். இலத்தீன் மொழியில் “பர்சனா” “Pநசளழயெ” என்பது “மறைப்பு”, “முகமூடி” என்னும் பொருள் தருவது. எனவே ஆளுமை ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி” என்னும் கருத்துருவின் அடிப்படையைக் கொண்டுள்ளது. உள்ளார்ந்த திறன்களைத் தன்னியல்பாகப் பயன்படுத்தும் இயல்பு ஆளுமை விருத்தியின்பாற்பட்டது. ஆளுமை என்றால் தோற்றமிடுக்கு என்று சிலர் தவறாகக் கருதுவதும் உண்டு. அவ்வாறு அன்றி மனங்களை ஆளும் வல்லமை, ஆளுமை என்று விளக்கம் அளிக்கப்படுகின்றது. ஆளுமையின் முதன்மை அடையாளமாகத் தன்னைத்தானே ஆளும் திறன் அமையும் என்று கூறப்படுகின்றது. தன்னை ஆள முடியாதவன் மற்றவரை ஆள முனைவது எளிதன்று. எனவேதான், ஆளுமையின் அடிப்படை, தன்னைத் தான் ஆளுகின்ற திறத்தில் அடங்கியுள்ளது என உளவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

ஆளுமை பற்றிய கோட்பாடுகளில் சிக்மன்ட் ஃபிராயிட் (Sigmund Freud)இ வால்டர் மிஸ்செல் (Walter Mischel)இ ஆர். பி. கட்டெல் (R.B. Cattell)இ ஜெ. எம். டிக்மன் (J. M. Digman) ஆகிய பல உளவியல் அறிஞரின் கருத்துக்களின் செல்வாக்கும் காணப்படுகின்றது. மனிதரின் ஆளுமையை விபரிப்பதற்கு திறந்த மனப்பான்மை (Openness), மனச்சாட்சிக்கு கட்டுப்படும் தன்மை (Conscientiousness), புறமுக ஆளுமை (), ஏExtroversion and Introversion) ற்றுக்கொள்ளும் தன்மை (Agreeableness), உணர்ச்சி மிகுந்த தன்மை (Neuroticism), ஆகிய ஐந்து காரணிகள் இருப்பதாக நவீன உளவியல் கோட்பாடுகள் கூறுகின்றன.

தனி மனிதனுடைய ஆளுமை பல விதங்களால் அடையாளம் காணப்படுகின்றது. ஒருவர் தனது பிரசன்னத்தினால், மற்றையோரை அவர்கள் அறியாமலேயே கவரும் தன்மையில் ஆளுமை பொதிந்துள்ளது. எடுத்துக் காட்டாக, இயல்பாகவே தம்மைச் சூழ இருப்பவர்களைத் தம்பால்கவர வைக்கும் சக்தி கொண்ட சுவாமி விவேகானந்தர் போன்றோர் பற்றி நாம் அறிவோம். மேலும் அவரவர் வாழ்க்கை முறைகளை ஒட்டி, சுற்றுச் சூழலாலும் ஆளுமை அமைகின்றது. அதே சமயம் படிப்படியாக ஆளுமையைக் கற்றுப் பெற்றுக் கொள்வதும் சாத்தியப்படும்.

புறத்தோற்றப் பொலிவு

முதலில் ஒருவரைப் பார்க்கும் போது தோன்றுவது அவரது தோற்றப் பொலிவு. அது கவர்ச்சியான உருவம், உளமகிழ்ச்சி, சுறுசுறுப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டது. “நிற்கையில் நிமிர்ந்து நில்! நடப்பதில் மகிழ்ச்சி கொள்!” என்பார் பாவேந்தர். சுறுசுறுப்பாகச் செயற்பட்டுக் கொண்டு இருப்பவர்களுக்குத் தோற்றப் பொலிவு தானாகவே அமையும். வெறும் தோற்றப்பொலிவு புனைபாவை போல வெளிப் பகட்டாகவன்றி முழுமையான ஆளுமை ஆகாது. ஒருவரது ஆளுமையை அவரது உடை, உடல்;;;நலன் சார்ந்த தோற்றப்பொலிவு, செயல்திறன் என்பவற்றால் முடிவு செய்ய முனைகின்றனர். அதே சமயம் போலியான உருவ ஆளுமை கொண்டோரையும் எம் மத்தியில் நாம் அடையாளம் காணலாம். முருங்கைக்காய் போல கைகள் உள்ள ஒரு நடிகன், காவல்துறை அதிகாரி வேடத்தில் பத்துப் பேரைப் புரட்டி அடித்துப் பந்தாடுகிறான். உண்மையான சண்டையாகத் தோன்றாமல் அது நகைச்சுவைக் காட்சியாய் தோன்றக் காரணம் நடிகனது உருவ ஆளுமை போலியானது என்பதாலேயே ஆகும்.

செயல்திறன்

ஒருவரது திறமையைப் பற்றிய புகழுரைகளைக் கேட்ட மாத்திரத்திலேயே வசப்பட வைக்கும் ஆளுமை கொண்டவர்கள் பலர் நம் மத்தியில் வாழ்ந்துள்ளனர். அதற்கு அத் தனி மனிதரின் செயல்திறன், காரணமாக அமைகின்றது. சாதாரண போர் வீரனாக இருந்த நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத்தலைமையை ஏற்றபோது அவனது வெற்றிகளைக் கேள்வியுற்ற மாத்திரத்திலேயே அவனது படை அணியில் சேர்ந்து தமது உயிரையும் தியாகம் செய்யப் பல்லாயிரக் கணக்கானவர்கள் முன் வந்தனர் என வரலாறு கூறுகின்றது. புகழின் உச்சியில் உள்ள பலர் அத்தன்மையான ஆளுமை கொண்டவர்கள். திடமான தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகவே அவர்களது ஆளுமை அமைந்துள்ளது.

கல்விப் பயிற்சி

பல்வேறு துறைகளைச் சார்ந்து முன்னணியில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களில் தனித்துவமான ஆளுமை கொண்ட பெரும் சாதனையாளர்களை நாம் காண்கின்றோம். அவ்வாறு பலர் திகழ்வதற்கு, அவர்கள் தமது இளமைக் காலத்தில் இருந்து பெற்ற மேம்பட்ட கல்விப் பயிற்சியே அடிப்படைக் காரணமாகும். தற்காலத்தில் முகாமைத்துவக் கல்வி மூலமும், மேலாண்மைப் பயிற்சிகள் மூலமும் மேலும் மெருகூட்டப்பட்ட ஆளுமையை பெறும் வாய்ப்புகள் பல உண்டு. அது போலன்றிப் பால்ய வயதிலே அமைந்த சுற்றுப்;புறச் சூழலும் சிலரது தனிப்பட்ட ஆளுமையின் தோற்றத்திற்குக் காரணமாகின்றது.

தேவைகளின் வெளிப்பாடு

குழந்தை பிறந்ததுமே அதனுடைய ஆளுமைத்திறன் பிறக்கிறது எனக் கூறப்படுகின்றது. குழந்தை தனக்குப் பசி வந்தவுடன் இயல்பூக்கத்தால் (Instinct) அழுகிறது. அழுதவுடன் தாய் பாலூட்டியதும் அதன் தேவை நிறைவடைகிறது. பாலுக்காக அழும் \குழந்தையின் அழுகை, ஆளுமையின் ஓர் வெளிப்பாடேயாகும். தன் தேவைக்குக் குரல் எழுப்ப வேண்டும் என்ற புரிதலால் எழும் அழுகை, தேவை நிறைவிற்கான முயற்சியாகும். குழந்தைகள் வயது கூடும் போதும் அழுவதன் மூலம் தமது தேவைகளையெல்லாம் நிறைவு செய்ய முயல்வர். தன் விருப்பங்களை தாம் விரும்பும்படியே பெற முயலும் ஆளுமை குழந்தைகளிடம் அதிகம். உண்ணும் உணவிலிருந்து, உடை, அணி என்று எல்லாவற்றிலும் தான் விரும்புவதையே பெற வேண்டும் என்ற பிடிவாதக் குணம் குழந்தைகளிடம் உண்டு. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி தன்னை முன்னிறுத்திக் கொள்ளக் குழந்தைப் பருவத்தினர் முயலுவர். இந்த முயற்சியும் அவர்களின் தன்னம்பிக்கையைக் கட்டமைக்க உதவும் ஆளுமையின் வெளிப்பாடாகும்.

இளமையில் ஆளுமை

கூடிவாழும் சமூக உணர்வு இளமையிலேயே குழந்தைகளின் நெஞ்சில் இயல்பு விருப்பமாகவே எழுகிறது. ஒரு தெருவில் தம்மை ஒத்த பிள்ளைகள் இருபப்pன ;அவாக்ள ;ஒனறு; சோந்து;விடுவா.; எஙகு; செனற்hலும,; விளையாடினாலும,; ஆடிப் பாடினாலும் ஒன்றாக இணைந்து செயல்படுவர். பெரியவர்கள் அடக்கி, ஒடுக்கி, வீட்டிலே அடைத்தாலும், அதையும் மீறி வெளியில் வந்து நண்பர்களுடன் சேர்வதன் மூலம் தோழமை ஆளுமை துளிர்க்கிறது. அதே போன்று மணலால் வீடு கட்டுதல், ஊஞ்சல் அமைத்து ஆடுதல், தேர் செய்தல், காற்றாடி செய்தல் என்று பல விளையாட்டுப் பொருட்களை தம் கைகளால் தாமே உருவாக்கும் திறன் குழந்தைகளின் பிற்கால ஆளுமைத் திறமைகளுக்கு அடிகோலுகின்றது. குழந்தைகளின் ஆளுமைத் திறன்களைப் பெற்றோரும் ஆசிரியரும் இனம் கண்டு ஊக்கப்படுத்துவதன் மூலம் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் பயன்படுமாறு சிறார்களை வழிப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.

உளவியல் அறிஞர்களின் கருத்து

சமகாலச் சமூகத்தின் பொதுவான எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்ய முடியாத இடத்து தன்னம்பிக்கை குன்றுவதனால் ஆளுமைச் சிதைவு (Pநசளழயெடவைல னளைழசனநச) ஏற்படக் கூடும். தன்னம்பிக்கையை ஒழுங்கும், சீர்த்தன்மையும் கொண்ட பன்முக வெளிப்பாடுகளைக் கைக்கொள்வதன் மூலம் கட்டி எழுப்புவதனால் அடைய முடியும். அவ்வாறு மனிதனிடம் உள்ள திறன்களை வெளிக்கொண்டு வரும் செயற்பாடாக ஆளுமை விருத்தி உருவாக்கம் பெறுகின்றது. அது எண்ணங்கள், உணர்வுகள், நெருக்கமான உறவுகள், பிற சமூகத் தொடர்பாடல்கள் ஆகிய பல்வேறு திறன்களைக் கூட்டுமொத்தமாக விருத்தி செய்யும். தனி மனிதனைத் தன்னம்பிக்கை கொண்ட பூரண மனிதன் ஆக்குவதற்கு ஆளுமைத் திறன்கள் விருத்தி செய்யப்படுதல் வேண்டும் என்பது உளவியல் அறிஞர்களின் கருத்தாகும்.

ஒருவர் தனது செயற்படுதிறனிலும் கூர்ந்த மதியிலும் அசையாத நம்பிக்கையுடன் அமைதியாகக் கருமமாற்றும் போது அங்கு தன்நம்பிக்கையைத் தளமாகக் கொண்ட ஆளுமை பளிச்சிடும.; உளவியல் அறிஞரின் கருத்துப்படி பெரும்பாலான ஆளுமைப் பண்புகள் இயல்பாகவே பலரிடம் அமைந்து காணப்படும். அவை அவர்களின் பெற்றோரிடமிருந்து மரபணுக்கள் மூலம் பெறப்பட்டவையாகும். அவற்றுடன் சுற்றச்சூழல் அனுபவங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் தொகுப்பு ஒவ்வொருவரது ஆளுமையையும் தனிப்பட்டதாக்குகின்றது. ஆளுமைப் பண்பு அளவுக்கு அதிகமானாலோ அன்றித் தீவிரமடைந்தாலோ பிரச்சனைகள் ஏற்படும் நிலை தோன்றக்கூடும் எனக் கூறப்படுகின்றது. இடத்துக்கு இடம் சமுதாய கலாச்சார பின்னணியைப் பொறுத்து ஆளுமையின் அளவு காணப்படும் என வெதறால் (ஆ. றுநவாநசயடட) எனும் உளவியலாய்வாளர் கூறுகின்றார்.