பாடம் 15: கிளி.

கிளி ஒரு பறவை. கிளி மிகவும் அழகான பறவை. அது கீச்…கீச் என்ற சத்தமிடும். அது பச்சை நிறம் உடையது. கிளியின் சொண்டுகள் சிவப்பாக இருக்கும். கிளி மரத்தில் இருக்கும் பொந்துகளில் வாழும். கிளி பழங்களை விரும்பி உண்ணும்.

கிளிகளில் பல இனங்கள் உண்டு. கிளிகள் மனிதர் பேசுவதைக் கேட்டுத் திருப்பிப் பேசும் திறமை உடையன. இதனால் “கிளிகள் பேசும்” என்று கூறுவார்கள். பல நிறங்கள் கொண்ட கிளியைப் பஞ்சவர்ணக் கிளி என்பார்கள்.

___________________________________________________________________________________________________________________________________________________________________


பாடல் பாடுவோம்:

பச்சைக் கிளியே வா வா வா

பாலும் சோறும் உண்ண வா

கொச்சி மஞ்சள் பூச வா

கொஞ்சி விளையாட வா


பையப் பறந்து வா

பாடிப் பாடிக் களித்து வா

கையில் வந்திருக்க வா

கனியருந்த ஓடி வா


வட்டமாய் உன் கழுத்திலே

வான வில்லை ஆரமாய்

இட்ட மன்னன் யாரம்மா

யாம் அறியக் கூறம்மா