6. பொருத்தமான சொல்லைக் கொண்டு இடைவெளியை நிரப்புவோம்.
பள்ளி , பல்லி, மரம், மறம், கிலி, கிளி; மணம், மனம், புளி, புலி
1. அ. சுவரில் ஊர்வது .................................
ஆ. சிறுவர் செல்வது .................................
2. அ. வீட்டில் வளர்வது .................................
ஆ. வீரத்தின் ஒத்தசொல் .................................
3. அ. அழகிய பறவை .................................
ஆ. அச்சம் என்பது ................................
4. அ. மனிதருக்கு உள்ளது ................................
ஆ. மலரில் வீசுவது .................................
5. அ. காட்டில் வாழ்வது .................................
ஆ. கறியில் சேர்ப்பது .................................