பாடம் 1 : வீட்டு வேலை

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

இனிதாவது எங்கும் காணோம்

பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

- பாரதியார்




சொற்க்களின் பொருள்க்களை அறிவோம்.

பாமரர் - அறிவில்லாதவர் இகழ்ச்சி - அவமதித்தல்.
பான்மை - சிறப்பு. தேமதுரம் - தேன் போன்ற இனிமை.
நாமம் - பெயர். பரவும் - பரந்து இருத்தல்.

1. விடை எழுதுக.

(1). தமிழ்மொழி எப்படிப்பட்ட மொழி?

________________________________________________________________________________

(2). தமிழ்மொழி பேசப்படும் நாடுகள் ஐந்தினை எழுதுக.

________________________________________________________________________________

(3). தமிழோசை என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.

________________________________________________________________________________

(4). நாம் என்ன செய்ய வேண்டும் என்று பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது?

________________________________________________________________________________

(5). இந்தப் பாடலை எழுதியவர் யார்?

________________________________________________________________________________