யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு
நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்.
- பாரதியார்
பாமரர் - அறிவில்லாதவர் | இகழ்ச்சி - அவமதித்தல். |
பான்மை - சிறப்பு. | தேமதுரம் - தேன் போன்ற இனிமை. |
நாமம் - பெயர். | பரவும் - பரந்து இருத்தல். |
(1). தமிழ்மொழி எப்படிப்பட்ட மொழி?
________________________________________________________________________________
(2). தமிழ்மொழி பேசப்படும் நாடுகள் ஐந்தினை எழுதுக.
________________________________________________________________________________
(3). தமிழோசை என்ற சொல்லைப் பிரித்து எழுதுக.
________________________________________________________________________________
(4). நாம் என்ன செய்ய வேண்டும் என்று பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது?
________________________________________________________________________________
(5). இந்தப் பாடலை எழுதியவர் யார்?
________________________________________________________________________________