பாடம் 8:ஒற்றுமையே பலம்

ஒரு காட்டில் நான்கு எருமைகள் ஒன்றாய்க் கூடி ஒற்றுமையாக வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டில் வசித்த ஒரு சிங்கம் பல நாட்களாக இந்த எருமைகளைப் பார்த்துக் கொண்டி ருந்தது. அந்த எருமை களைக் கொன்று தன் பசியாற உண்ண எண்ணியது. ஆனால் எல்லா எருமைகளும் ஒற்றுமையாக இருந்ததனால் அவற்றைக் கொல்ல முடியவில்லை.

சிங்கம் அந்தக் காட்டில் வசித்த ஒரு நரியிடம் ஆலோசனை கேட்டது. நரி நன்றாக ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்தது. மறுநாள் அந்த நரி எருமைகளை தனித்தனியாக சந்தித்து மற்ற எருமைகளைப் பற்றி நீயே அவற்றை விடப் பலசாலி என்று கோள் மூட்டியது. இதனை நம்பிய எருமைகள் தமக்குள் சண்டையிட்டன. அவை தனித்தனியாகப் பிரிந்து செல்ல ஆரம்பித்தன.

இதுதான் தருணம் என்று எண்ணிய சிங்கம் அந்த எருமைகளை ஒவ்வொன்றாகக் கொன்று தின்றது. நரியும் சிங்கத்துடன் சேர்ந்து எருமைகளின் இறைச்சியை உண்டு மகிழ்ந்தது. "ஒற்றுமையே பலம்" என்பதனையும், "ஒற்றுமை இல்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்" என்பதனையும் இக்கதையிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.


சொற்களின் பொருள்களை அறிவோம்

வசித்தது - வாழ்ந்தது
கோள்மூட்டு - கூடாதவை கூறுதல்
பலசாலி - உடல் வலிமை உள்ளவன்
ஆலோசனை - புத்திமதி
தருணம் - தக்க சமயம்

வனத்தில் பல பயங்கரமான செயல்கள் நடைபெற்றாலும் நல்ல இனிய காட்சிகளையும் நாம் காணலாம். அதனை இப்பாடல்களில் படித்துச் காட்சிகளையும் நாம் காணலாம். அதனை இப்பாடல்களில் படித்துச் காட்சிகளையும் நாம் காணலாம். அதனை இப்பாடல்களில் படித்துச் சுவைப்போம்.

மிக்க நலமுடைய மரங்கள் - வெகு

விந்தைச் சுவையுடைய கனிகள் - எந்தப்

பக்கத்தையும் மறைக்கும் வரைகள் - அங்கு

பாடி நகர்ந்து வரும் நதிகள்.

ஆசை பெற விழிக்கும் மான்கள் - உள்ளம்

அஞ்சக் குரல் கொடுக்கும் புலிகள் - நல்ல

நேசக் கவிதை சொல்லும் பறவை - அங்கு

நீண்டு படுத்திருக்கும் பாம்பு.

தன்னிச்சை கொண்டு அலையும் சிங்கம் - அதன்

சத்தத்தினில் கலங்கும் யானை - அதன்

முன்னின்று ஓடும் இளமான்கள் - இவை

முட்டாது அயல் பதுங்கும் தவளை.


விந்தை - அதிசயம் வரை - மலை
அச்சம் - பயம் அயல் - பக்கம்
தன்னிச்சை - தான் விரும்பியபடி சுவை - உருசி
நகர்தல் - ஊர்ந்து செல்லல் நேசம் - அன்பு
கலங்கும் - பயப்படும் வனம் - கானகம், காடு