(பாத்திரங்கள்:- விமலன், நிமலன், தாத்தா, வைத்தியர்)
விமலன்: “வணக்கம், வாருங்கள்.”
நிமலன்: “வணக்கம். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?”
விமலன்: “நான் நலமாக இருக்கிறேன்.”
நிமலன்: “உங்கள் தாத்தாவின் சுகம் எப்படி?”
விமலன்: “தாத்தாதான் நலமின்றி இருக்கிறார்.”
நிமலன்: “அவருக்கு என்ன சுகவீனம்?”
விமலன்: “அவருக்குப் பல வருத்தங்கள் உள்ளன. அவருக்குத் தடிமன், இருமல், தொண்டை நோ. அத்துடன் கழுத்து நோவும், நெஞ்சு நோவும் உள்ளன. அதனால்தான் அவரை எங்கள் மருத்துவரிடம் அழைத்துக் கொண்டு போகிறேன்.”
நிமலன்: “சரி, நானும் உங்களுடன் வைத்தியசாலைக்கு வருகிறேன்.”அமைதி! அமைதி! மந்திரியாரே! நோய்க்கு முதலில் காரணத்தினைக் காணுதல் வேண்டும். உமது ஐயம் என்னவெனக் கூறும். பின்னர் அது தீர்க்கும் வழியைக் காணலாம்.
மந்திரி: அரசே! யான் நாட்டில் சஞ்சாரம் செய்துகொண்டிருந்த போது ஒரு அபூர்வப் பிறவியைக் கண்டேன்.
விகடகவி : என்ன, எமக்குத் தீங்கு செய்ய யாரேனும் முளைத்து விட்டார்களா? எமது எதிரிகளின் துப்பறியும் கையாட்கள் யாராவது...?
மந்திரி: அல்ல,அல்ல. யான் கண்ட அம் மனிதன் சாதாரணமான ஒருவன் தான். ஆனால் அவன் சர்வ உலகையும் படைத்துக் காத்து அளிக்கும் முழுமுதல் கடவுளை நம்புபவன் அல்லப் பிரபோ!
(இடம்: வைத்தியசாலை)
விமலன்: “வணக்கம், டாக்டர்.”
வைத்தியர்: “வணக்கம், அமருங்கள். தாத்தாவுக்கு என்ன சுகவீனம்?”
தாத்தா: எனக்கு கழுத்து நோகிறது. அந்தப் பக்கமோ, இந்தப் பக்கமோ அசைக்க முடியவில்லை. அத்துடன் இருமல், தடிமன், தொண்டை நோவும் உள்ளன. இருமும் போது நெஞ்சும் நோகிறது.
வைத்தியர்: “எவ்வளவு காலமாக இப்படிச் சுகவீனமாக இருக்கிறீர்கள்?”
தாத்தா: மூன்று நாட்களாகச் சுகவீனமாக இருக்கிறேன்.
வைத்தியர் : நீங்கள் தற்போது ஏதாவது மருந்துகள் சாப்பிடுகிறீர்களா?
தாத்தா: இல்லை. மல்லி அவித்துக் குடிக்கிறேன்.
விமலன்: “இவருக்கு நீரிழிவு நோயும் இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது.”
வைத்தியர்: “ஆசிய மக்கள் பலருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. என்றாலும் இவருக்கும் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை.”
விமலன்: “இவர் சாப்பாட்டிலும் அவ்வளவாக அக்கறை எடுப்பதில்லை. இவருக்கு நல்ல மருத்துவ அறிவுரை கூறுங்கள்.”
விமலன்: “இவர் சாப்பாட்டிலும் அவ்வளவாக அக்கறை எடுப்பதில்லை. இவருக்கு நல்ல மருத்துவ அறிவுரை கூறுங்கள்.”
வைத்தியர்: “நான் இவரைப் பரிசோதித்துவிட்டு அவசியமானால் மருந்துச் சீட்டு எழுதித் தருகிறேன்.” (ஒரு கதிரையைக் காட்டி) இதிலே வந்து இருங்கள்.(பரிசோதனைகள் முடிந்ததும்) விமலன், இந்த மருந்துச் சீட்டைக் கொடுத்து மருந்துகளை வாங்குங்கள்.
நீரிழிவு நோய் உள்ளதா என அறியச் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியுள்ளன.
முக்கியமாக இரத்தப் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளது. இது அதற்கான சீட்டு. இதனைக் காட்டி உரிய பரிசோதனை செய்யலாம்.
வைத்தியர்: “நான் இவரைப் பரிசோதித்துவிட்டு அவசியமானால் மருந்துச் சீட்டு எழுதித் தருகிறேன்.”
தாத்தா : “நன்றி.”
விமலன்: “நன்றி, டாக்டர். நாங்கள் சென்று வருகிறோம்.”
வைத்தியர்: சென்று வாருங்கள்.