பாடம் 4 : வீட்டு வேலை

I. மனிதர்களுக்கு வரக்கூடிய பத்து நோய்களின் பெயர்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுக:

1) ............................................... ...............................................
2) ............................................... ...............................................
3) ............................................... ...............................................
4) ............................................... ...............................................
5) ............................................... ...............................................
6) ............................................... ...............................................
7) ............................................... ...............................................
8) ............................................... ...............................................
9) ............................................... ...............................................
10) ............................................... ...............................................

II. விடுகதை

(1). வீட்டுக்குள் இருப்பான். வீண் வம்பு பேசுவான். வா என்று அழைப்பான். வாசலுக்கு வெளியே வரமாட்டான்.

அவன் யார்? .................................................................................................

(2). அள்ளும் போது சலசலக்கும். கிள்ளும்போது கண்கலங்கும்.

அது என்ன? ..................................................................................................

III வாசித்து விடை தருக:

நிடதநாடு என்றொரு நாடு இருந்தது. அது நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. அதன் தலைநகரம் மாவிந்தம் ஆகும். நளன் என்னும் அரசன் அந்த நாட்டை ஆட்சி செய்தான். அவன் செங்கோல் தவறாது நன்முறையில் ஆட்சி செய்தான். வாய்மையிலும், வீரத்திலும் அவனுக்கு நிகர் எவருமில்லை. அவனுடைய ஆட்சியில் மக்கள் மட்டுமன்றி விலங்குகள் கூட பகையின்றி வாழ்ந்தன. இயல்பாகவே பகைமை கொண்ட பருந்தும் கிளியும் ஒரு கூட்டில் வாழ்ந்தன என்றால், அவனுடைய ஆட்சி எவ்வளவு சிறப்புடையதாய் இருந்திருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்.

வசந்த காலத்தில் ஒருநாள் நளமகாராசன் நறுமணம் கமழும் சோலை ஒன்றில் உலாவச் சென்றான். அச்சோலையிலே அழகான ஒரு பொய்கை இருந்தது. அப்பொய்கையில் மலர்ந்த தாமரை மலரில் ஓர் அழகிய அன்னப் பறவை அமர்ந்திருந்தது. அதனைப் பிடிக்கும்படி பணிப்பெண்களை ஏவினான். அவர்கள் அதனைப் பிடித்துக் கொண்டுபோய் அரசன் முன் வைத்தனர். அது தன் சுற்றத்தைத் தேடிக் காணாது கலங்கியது. அன்னத்தின் கலக்கத்தைக் கண்ட அரசன் “அன்னமே, அஞ்சாதே, உன் நடையின் அழகைக் கண்டு களிக்கவே பிடிப்பித்தேன். உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்று அன்போடு கூறினான்.

1). நளன் ஆண்ட நாடு எது? அதன் தலைநகர் எது?

.......................................................................................

2). அன்னத்தை நளன் பிடித்ததன் காரணம் யாது?

........................................................................................

3). நளன் ஆட்சியில் விலங்குகள் எவ்வாறு வாழ்ந்தன?

........................................................................................

4). அழகிய அன்னப் பறவை எங்கே இருந்தது?

..........................................................................................

5). அன்னப் பறவையைப் பிடிக்கும்படி நளன் யாருக்குக் கட்டளை இட்டான்?

........................................................................................

IV.ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திடுக.

1)மருந்து ............................................... 2)வைத்தியர் ...............................................
3)இரத்தம் ............................................... 4)இருமல் ...............................................
5)தடிமன் ............................................... 6)நீரிழிவு நோய் ...............................................
7)தொண்டை நோ ............................................... 8)மருந்துச் சீட்டு ...............................................
9)வேம்பு ............................................... 10)தளபாடம் ...............................................
11) கிருமிகள் ............................................... 12)கழுத்து நோ ...............................................
13)அறிவுரை ...............................................

V.ஏற்ற தமிழ் சொற்கள் எழுதுக.

1)Capital city ............................................... 2)Swan ...............................................
3)Province ............................................... 4)Fertile ...............................................
5)The highest mountain ............................................... 6)Ruler ...............................................
7)The longest river ............................................... 8)International ...............................................
9)Zones ............................................... 10)Classical language ...............................................