பாடம் 2 : பயிற்சி 6

VI. தமிழில் சொற்களை அசைகளாகப் பிரிக்கலாம்.

(பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைய அசைகள் (monosyllables) பிரிக்கப்படும்.

குறிப்பு: இரண்டு தமிழ் சொற்களை இசையோடு பாடவும், பாட்டுக்கள் புனையவும், தமிழைத் திருத்தமாக வாசிக்கவும் அசைகள் உதவும். எழுத்து தனித்தோ அல்லது சேர்ந்தோ ஒசை தர அமையின் அது அசை எனப்படும். அதாவது பிரிந்து அசைந்து ஓசை தரும். ஆய்த எழுத்தும் புள்ளியுள்ள குற்றெழுத்துக்களும் (ஒற்றெழுத்துக்கள்) அசைகளாக கணிக்கப்படுவதில்லை. ஆனால் அவை தம் முன்னிற்கும் அசையோடு சேர்த்து எழுதப்படும். பின்வரும் எட்டு வகையாக அசைகள் அமையும்.

(1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை .................... (1) கோழி முட்டை ....................
குறில் எழுத்து தனியாக எ-கா:
குறில் + ஒற்றெழுத்து பல் என்
நெடில் தனித்து கா
நெடில் + ஒற்றெழுத்து தாள் ஆண்
குறில் + குறில் பட இன
குறில் + குறில் + ஒற்றெழுத்து படம் இலன்
நெடில் + குறில் பாட தேசு
நெடில் + குறில் + ஒற்று பாடல் ஏவல்

மேலே தரப்பட்ட எட்டு வகையில் முதல் நான்கும் நேரசை எனவும் அடுத்த நான்கும் நிரையசை என்றும் வழங்கப்படும்

எடுத்துக்காட்டு: தேமா புளிமா = தே + மா புளி + மா

மாவிளங்காய் = மா + விளங் + காய்

கூவிளங்காய் =கூ + விளங் + காய்

குறிப்பு: ஆ என்ன அற்புதம் கண்டேனே =ஆ+என்+ன அற்+புதம் கண்+டே+னே இரண்டு ஒற்றெழுத்துக்கள் அடுத்து வருமாயின் இரண்டும் கணிக்கப்படுவதில்லை.

எ-கா : பார்த்திபன் = பார்த்+திபன்

பின்வரும் சொற்களை அசைகளாகப் பிரிக்கவும்.

மகிழ்ந்தேனே :
ஆரோக்கியநாதன் :
அந்நியன் :
வாழ்த்தினேன் :
மகிழ்ந்தேனே :