"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
- பாரதியார் -
திருக்குறள் எனும் தமிழ் நூலை அறியாதவர்கள் இருக்கமுடியாது. தமிழிலிருந்து வேறு மொழிகளில் அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் இதுதான். உலகில் இன, மொழி, மத பேதமின்றி யாவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நூல்களில் திருக்குறளும் ஒன்றாகும். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்டது.
எந்த இனத்தையும் சமயத்தையும் சாராத வகையில் திருக்குறள் இயற்றப்பட்டுள்ளது. இதனாலேயே திருக்குறளை உலகப் பொதுமறை எனக் கூறுவர். இது வள்ளுவரின் அறிவையும், பெருமையையும் காட்டுகிறது.
தமிழில் இரண்டு அடிகளைக் கொண்ட செய்யுள்களைக் "குறள்" எனக் கூறுவர். திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. இவை பத்துப் பாக்களைக் கொண்ட 133 அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளன.
ஓர் அதிகாரம் ஒரு குறிப்பிட்ட விடயத்தைப் பற்றியதாக இருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான எல்லா நீதிகளையும் திருக்குறள் போதிக்கின்றது.
திருக்குறள் தமிழ் மக்களுக்கு என்றென்றும் பெருமை சேர்க்கும் ஒரு நூலாகும். இவ்வாறான ஒரு நூலை எமக்குத் தந்த திருவள்ளுவரை நாம் வாழ்நாள் முழுவதும் போற்றுவோம்.
(ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்தால் அதனை உடனே மறந்துவிட வேண்டும்.)
Do not be ungrateful, but do forget at once the folly of a genuine friend.
(மணல் நிலத்தில் தோண்டிய அளவுக்கு நீர் ஊறும்; அதுபோல மனிதர்களுக்குத் தாம் படிக்குமளவு அறிவு பெருகும்.)
Deeper you dig the higher a spring flows; the ardour you devote to learning, the fuller is knowledge.
(நல்ல நூல்கள் படிக்க படிக்க இன்பம் தரும். அதுபோல நல்ல பண்புள்ளவர்களுடைய நட்பும் பழகப்பழக இன்பம் தரும்.)
Treasure of good literature reveals riches each time we probe; friendship grows with new dimensions of ecstasy