எனது மாமாவின் ஆறு வயது மகன் இப்பாடத்திலுள்ள கதையை நான் வீட்டில் படிக்கும்போது மிகவும் ஆவலுடன் கேட்டுக்கொண்டு இருந்தான். இரண்டு கிழமைகள் கழிந்தன. ஒருநாள் எமது விடுமுறையைக் கழிப்பதற்காக அம்மா, அப்பாவுடன் பிரான்ஸ் (குசயnஉந) நாட்டிற்குச் சென்று வர ஆயத்தமாகிக் கொண்டு இருந்தோம். அப்போது எமது வீட்டுத் தொலைபேசி மணி ஒலித்தது. மாமாவின் மகன்தான் மறுமுனையில் பேசினார். “மச்சான், நீங்கள் போகும் பாதைகளை நன்றாகப் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். எனது பிறந்தநாள் விரைவில் வருகிறது. அதற்கு நீர் கட்டாயம் வரவேண்டும். தற்செயலாக உங்களுக்கும் இந்தக் கதையில் நடந்ததுபோல் ஏதாவது நடந்து, நீங்களும் ஒரு தீவில் போய் இருந்துவிட்டால் நான் உங்களைப் பார்க்கவே முடியாது போய்விடும். உங்களுக்குப் பாதைகள் நன்றாகத் தெரிந்திருந்தால் நீங்களாகவே வீட்டிற்கு வந்துவிடலாம் அல்லவா?” என்றான்.