பாடம் 9 :வீட்டுவேலை

1. பழமொழி

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

இவற்றின் கருத்து யாது?

..............................................................................................................................

..............................................................................................................................

..............................................................................................................................

2. கீறிட்ட சொற்களுக்கு ஏற்ற எதிர்ச்சொல்லை வெற்றிடங்களில் நிரப்புக.

(1) வாழ்க்கையில் இன்பமும் ————————— மாறிமாறி வரும்.

(2) உலகில் மனிதன் பிறப்பதும் ——————— தினசரி நடக்கும் செயல்.

(3) முயற்சி இருந்தால் தோல்வி ————————— யாக மாறும்.

(4) வீரனிடம் சில வாள்கள் கூர்மையாகவும் ———————— யும் இருந்தன.

(5) ஓரேநாளில் மலை மீது ஏறி ————————— னான்.

(6) உலகில் இன்றும் மக்களிடையே நட்பும் ———————— இருக்கின்றன.

(7).நம் நாட்டில் பல பொருட்கள் ஏற்றுமதி ——————— செய்யப்படுகின்றன.

(8).விண்ணில் இயற்கை ———————— கோள்கள் உள்ளன.

(9).கண்ணில்லாதவனுக்கு இருட்டும் ————————— ஒன்று தான்.

(10).கடலில் அமைதியும் ————————— மாறி மாறி ஏற்படும்.

3. விடுகதை

(1).உயிர் இன்றி ஊரெல்லாம் திரியும். உருவம் இன்றி ஓடித் திரியும். கைகள் இன்றி தொட்டுவிளையாடும். கால்கள் இன்றி கண்ட இடமெல்லாம் வரும். அது என்ன?

.......................................................................................................................

(2).எண்ணெயில் கோலம் போட்டு எடுத்த ஒரு பின்னல் தட்டு. அது என்ன?

.......................................................................................................................


4. அடைப்புக்குறிக்குள் இருக்கும் சொற்களிலிருந்து ஆண் பெண் இரண்டிற்கும் பொதுவான சொல்லைத் தெரிந்து எழுதுக.

(1)............................. வைத்தியசாலைக்குச் செல்வர்.

(வருத்தக்காரன், வருத்தக்காரி, நோயாளிகள்)

(2).ஒளவையார் ஒரு சிறந்த தமிழ்ப் .........................

(புலவர், புலவன், புலவி)

(3).தந்தை தன் .......................... வேண்டுகோள் விடுத்தார்.

(மகனுக்கு, மகளுக்கு. பிள்ளைக்கு)

(4)........................ பருவம் 16 வயது முதல் 30 வயது வரை ஆகும் என்று

சிலர் கூறுவர். (குமரன், விடலை, குமரி)

(5).கூட்டத்திற்குப் பிந்தி வந்தார்.

(செயலர், செயலினி, தலைவன்)


5.அடைப்புக்குள் இருக்கும் சரியான சொல்லைத் தேர்ந்து அதன் கீழ்க் கோடிடுக.

(1).அவன் பந்து விளையாடினான். (தன்மை, முன்னிலை, படர்க்கை)

(2).நான் கடிதம் எழுதினேன். (தன்மை, முன்னிலை, படர்க்கை)

(3).நீ ஏன் வரவில்லை? (தன்மை, முன்னிலை, படர்க்கை)

(4).அவர்கள் பாடம் படித்தனர். (ஆண்பால், பெண்பால், பலர்பால்)

(5).பறவை பறந்தது. (ஆண்பால், பெண்பால், பலர்பால்)