பாடம் 15 :வீட்டுவேலை

I) சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோ ரிடாதா ரிழிகுலத்தோர்

பட்டாங் கிலுள்ள படி

அருஞ்சொல் விளக்கம்

சாற்றுங்கால்=சரியாகக் கூறின்

மேதினி = உலகம்

பட்டாங்கு = சிறந்த நூல்கள்

இப்பாட்டை சந்தி பிரித்து எழுதுக :

...................................................................................................................................................................................................................

...................................................................................................................................................................................................................

...................................................................................................................................................................................................................

...................................................................................................................................................................................................................

II) கீழே கருத்துப்படி மாற்றி எழுதிய,'பாட்டை ஆங்கிலத்தில் தருக. “பட்டாங்கிலுள்ளபடி சாற்றுங்கால் சாதி இரண்டொழிய வேறில்லை வழுவாத நீதி நெறிமுறையின் படி, இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் ஆவார்.'

...................................................................................................................................................................................................................

...................................................................................................................................................................................................................

...................................................................................................................................................................................................................

III) கீழே தரப்பட்ட பந்தியில் ஆங்கில ஒலிப்பில் எழுதிய சொற்களையும் வேறு இலக்கணப் பிழைகளையும் திருத்தி எழுதுக. நான் அன்ரி வீட்டுக்குப் போனேன் வீட்டு கேற் பூட்டியிருந்தது. கோலிங் பெல்லை அழுத்தினேன் அங்கிள் வந்து கம் இன் என்று அழைத்தார். தம்பி மோனே எங்கட வூட்ட மறந்துட்டியோ? பொரினுக்கு போகப்போரியே? மம்மியின் ஹெல்த் எப்படி ?

...................................................................................................................................................................................................................

...................................................................................................................................................................................................................

...................................................................................................................................................................................................................