பாடம் 5 : பயிற்சி 7

VII. இரண்டு சொற்களில் முதல் மொழியின் ஈறும், வருமொழியின் முதலும் ஒசை நயம்பெற இணைதல் புணர்ச்சி எனப்படும். இது இருவகைப்படும்

1). இயல்புப் புணர்ச்சி: எழுத்துக்கள் மாற்றமின்றி இயல்பாகப் புணரும். எ-கா:- பொன் வளையல்,

2). விகாரப் புணர்ச்சி. இதில் தோன்றல், கெடுதல், திரிதல் என்ற வழிகளில் ஒன்றையேனும் பலவற்றையேனும் பெற்றுச் சொற்கள் சேரும், எ-கா:- வாழை + குலை = வாழைக்குலை “க்” தோன்றல் மரம்+ நிழல் + மரநிழல் “ம்” கெடுதல்

பால் + குடம்= பாற்குடம் “ல்”-> “ற்”; திரிதல்

நிலம் + பனை= நிலப்பனை “ம்”; கெட்டு “ப்” தோன்றியது.

மேலே காட்டிய விதிகளுக்கமைய எடுத்துக்காட்டுக்கள் தருக.

1). இயல்புப் புணர்ச்சி

.................................................................................................................................

2). விகாரப் புணர்ச்சி (தோன்றல் விகாரம்)

.................................................................................................................................

3). விகாரப் புணர்ச்சி (கெடுதல் விகாரம்)

.................................................................................................................................

4). விகாரப் புணர்ச்சி (திரிதல் விகாரம்)

.................................................................................................................................

5).விகாரப் புணர்ச்சி (திரிதலும் தோன்றலும்)

.................................................................................................................................