“சுத்தம் சுகம் தரும்” என்பார்கள்.
நமது உடலையூம் வசிக்கும் இடத்தையூம்
சுத்தமாகப் பேண வேண்டும்.
நாம் வசிக்கின்ற இடம் வீடு.
நாம் கல்வி கற்கும் இடம் பாடசாலை
இவ்விடங்களை நாம் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
அதற்கு என்ன செய்யலாம்?
வீட்டிலும் பாடசாலையிலும் தேவையில்லாத பொருட்களை உடனே அகற்றுதல் நன்று.
கழிவூகளை உரிய இடத்தில் மூடிய தொட்டிகளில் இடவேண்டும்.
நமது ஆடைகள், நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள் ஆகியவற்றைக் கழுவிச் சுத்தமாக வைத்திருப்போம்.
சுத்தமாக இல்லாவிட்டால் உடல் நலம் கெடும்.
சுத்தமே சுகத்தைத் தரும்.
சுத்தமுள்ள இட மெங்கும்
சுகமும் உண்டு; நீ அதனை
நித்தம் நித்தம் பேணுவையேல்
நீண்டஆயூள் பெறுவாயே.