இணைமொழி என்பது ஒரு சொல்லுடன் தொடர்புடைய இன்னுமொரு சொல்லும் சேர்ந்து வருவது.
(1) எனது அப்பா இரவுபகல் பாராமல் கடினமாக உழைத்தார்.
(2) கவிதா மூச்சுப்பேச்சு இல்லாமல் மயங்கி விழுந்தாள்.
(3) அந்த நிலத்தில் புல்பூண்டு கூட முளைக்காது.
(4) சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.
(5) காய்ச்சல் ஏற்பட்டதால் எலும்பும் தோலுமாய் ஆகிப் போனேன்.
(6) அவர்கள் இருவரும் நகமும் சதையும் போன்ற நண்பர்கள்.
(7) மகிழ்ச்சியில் எனக்கு என்ன செய்வதென்று தலைகால் புரியவில்லை.
(8) அங்கு ஏறத்தாழ நூறாயிரம் புத்தகங்கள் உள்ளன.