முன்னொரு காலத்தில் கந்தசாமி என்பவரிடம் ஓர் ஆட்டுக்குட்டியும், ஒரு கீரைக்கட்டும்,ஒரு புலிக்குட்டியும் இருந்தன. ஒருநாள் அவர் இவைகளுடன் ஓர் ஆற்றைக் கடந்து பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவருக்கு உதவி செய்ய ஒருவரும் இருக்கவில்லை. ஆற்றங்கரைக்கு வந்த அவர் தனது ஓடத்தை எடுத்துக்கொண்டு தான் கொண்டுவந்த ஆட்டுக்குட்டி, கீரைக்கட்டு, புலிக்குட்டி என்பவற்றை ஏற்றிக்கொண்டு மறு கரைக்குச் சென்றார். ஆற்றைக் கடக்கும்போது ஒரு தடவையில் அவர் கொண்டு வந்தவைகளில் ஒன்றைத்தான் அவருடன் கொண்டு செல்ல முடியும். அது எப்படி? பிள்ளைகளே! நீங்கள் கண்டுபிடியுங்கள். தரப்பட்ட இடங்களில் எழுதுங்கள். எல்லாக் கோடுகளிலும் ஓடத்தில் இருப்பதை எழுதவேண்டும்.