பாடம் 3 : பயிற்சி 5

V. ஒலி வேறுபாடுகள்: ரகர, றகரச் சொற்கள் கற்போம்

1). அரி (சிங்கம்) - அரியை மிருகங்களின் அரசன் என்று கூறுவர்.
அறி (தெரிந்துகொள்ளுதல்) - நாம் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறியவேண்டும்
2). எரி (எரித்தல்) -வீடுகள் தீப்பிடித்து எரிந்தன.
எறி (எறிதல்) -குமரன் எறிந்த கல் வீட்டுக் கண்ணாடியை உடைத்தது.
3). இரை (உணவு) -சிங்கம் காட்டில் இரை தேடச் சென்றது.
இறை (கடவுள்) - - கோயில்களில் இறைவனைக் காணலாம்.
4).உரி (வெங்காயம்) -வெங்காயத் தோல் உரிக்க வேண்டும்.
உறி (தூக்கு) -சில வீடுகளில் சட்டியும் பானையும் உறியில் இருக்கும்.
5). கரி (எரித்த விறகு) (யானை) - கரி மிகவும் பெரிய காட்டு மிருகம்.
கறி (உணவு வகை) -எனக்கு மரக்கறி வகைகள் மிகவும் விருப்பம்.
6). குரை (குரைத்தல்) - முன்னர் அறிமுகம் இல்லாதவர்களைக் கண்டால் நாய் குரைக்கும்.
குறை (குற்றம்) -நாம் மற்றவர்களிடம் குறை காணக்கூடாது
7). தரி (அணிதல்) - அரசன் தலையில் முடி தரித்திருந்தார்.
தறி (வெட்டுதல்) - காட்டு மரங்களைத் தறித்து வீடுகள் கட்டுவார்கள்.
8). நிரை (வரிசை) -மாடுகள் நிரை நிரையாகச் சென்றன.
நிறை (பாரம்) -கடையில் சில பொருட்களை நிறையின்படியே விற்பார்கள்.
9). பரி (குதிரை) -பரிகளின் ஓட்டம் உலகில் பல நாடுகளில் மிகவும் பிரபல்யமானது.
பறி (பறித்தல்) -திருடன் கைப்பையைப் பறித்துக்கொண்டு ஓடினான்.
10). பாரை (மீன்வகை) -பாரை மீன் பலரால் விரும்பி உண்ணப்படும்.
பாறை (கல்) - கண்ணாடி பாறையில் வீழ்ந்து நொருங்கியது.