1). அரி (சிங்கம்) |
- அரியை மிருகங்களின் அரசன் என்று கூறுவர். |
அறி (தெரிந்துகொள்ளுதல்) |
- நாம் தமிழ்ச் சொற்களின் பொருள்களை அறியவேண்டும் |
2). எரி (எரித்தல்) |
-வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. |
எறி (எறிதல்) |
-குமரன் எறிந்த கல் வீட்டுக் கண்ணாடியை உடைத்தது. |
3). இரை (உணவு) |
-சிங்கம் காட்டில் இரை தேடச் சென்றது. |
இறை (கடவுள்) |
- - கோயில்களில் இறைவனைக் காணலாம். |
4).உரி (வெங்காயம்) |
-வெங்காயத் தோல் உரிக்க வேண்டும். |
உறி (தூக்கு) |
-சில வீடுகளில் சட்டியும் பானையும் உறியில் இருக்கும். |
5). கரி (எரித்த விறகு) (யானை) |
- கரி மிகவும் பெரிய காட்டு மிருகம். |
கறி (உணவு வகை) |
-எனக்கு மரக்கறி வகைகள் மிகவும் விருப்பம். |
6). குரை (குரைத்தல்) |
- முன்னர் அறிமுகம் இல்லாதவர்களைக் கண்டால் நாய் குரைக்கும். |
குறை (குற்றம்) |
-நாம் மற்றவர்களிடம் குறை காணக்கூடாது |
7). தரி (அணிதல்) |
- அரசன் தலையில் முடி தரித்திருந்தார். |
தறி (வெட்டுதல்) |
- காட்டு மரங்களைத் தறித்து வீடுகள் கட்டுவார்கள். |
8). நிரை (வரிசை) |
-மாடுகள் நிரை நிரையாகச் சென்றன. |
நிறை (பாரம்) |
-கடையில் சில பொருட்களை நிறையின்படியே விற்பார்கள். |
9). பரி (குதிரை) |
-பரிகளின் ஓட்டம் உலகில் பல நாடுகளில் மிகவும் பிரபல்யமானது. |
பறி (பறித்தல்) |
-திருடன் கைப்பையைப் பறித்துக்கொண்டு
ஓடினான்.
|
10). பாரை (மீன்வகை) |
-பாரை மீன் பலரால் விரும்பி உண்ணப்படும். |
பாறை (கல்) |
- கண்ணாடி பாறையில் வீழ்ந்து நொருங்கியது. |